Kidney: சிறுநீரக செயலிழப்பிற்கு சிறு அறிகுறிகள்!

Advertisements

சிறுநீரகம்;

நமக்கு இயற்கை உபாதைகள் போக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவை சிறுநீரகம். அவரை விதை போன்ற வடிவத்தில் இரண்டு சிறுநீரகங்கள் இடப்புறம் மற்றும் வலது புறம் ஒன்று இருக்கும். உயிர் நாடியாக கருதப்படுகிறது. நம் உடலில் உள்ள கெட்ட நீரானது வெளியேற வேண்டியது அவசியம்.

அறிகுறிகள்;

கால்கள், பாதங்களில் வீக்கம்;

சிறுநீரகத்தின் பணி தொய்வடையும் போது பாதங்கள், கைகள் வீங்கும். உடலில் இருக்கும் நச்சுநீர் வெளியேறாமல் சோடியத்தின் அளவில் சமநிலை உண்டாகி நீர் தேக்கம் ஆகும். இதனால் வெளியேற வேண்டிய நச்சு நீர் கணுக்கால், கைகளில் தங்கி வீக்கத்தை உண்டாக்குகிறது.

கிட்னி ஸ்டோன்:

கணுக்கால் வீக்கமானது தொடர்ந்து இருக்கும். அதோடு காலணிகளை அணியமுடியாத அளவுக்கு வீங்கும். இதனால் நடக்கும் போது சிரமத்தை சந்திக்கலாம். கர்ப்பிணிகளுக்கு உண்டாவது இயல்பு.

ஒவ்வாமை, வயிறு கோளாறு;

வயிற்று வலிக்கு பல காரணங்கள் உண்டு. அதனால் வெறும் வயிறு வலியை இதனோடு ஒப்பிடவே முடியாது என்றாலும், வயிற்று வலி உடன் குமட்டல் வாந்திஉணர்வு உண்டாவது இரத்தத்தில் கழிவுகள் கலந்ததற்கான அறிகுறிகளிலும் ஒன்று.

வீக்கமான கண்கள்;

தூக்கமில்லாமல் இருப்பதால் கண்களுக்கு ஓய்வு கிடைக்காமல்ல் கண்களை சுற்றியுள்ள பகுதியில் வீக்கம் உண்டாகும் என்று நினைப்போம். ஆனால் சிறுநீரானது புரோட்டினை வடிகட்ட முடியாமல் உடல் முழுக்க பரவிவிடுவதால் அவை கண்களை சுற்றி வீக்கத்தை உண்டாக்கும். முகம் கூட வீக்கத்தை சந்திக்கும்.

இரவில் அடிக்கடி சிறுநீர்;

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் தான் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுவார்கள் என்று நினைக்கிறொம். ஆனால் சிறுநீரகங்களில் பணியில் தொய்வு உண்டாகும் போது அவை செயலிழக்கும் போது அடிக்கடி சிறுநீரை வெளியேற்றும். அதிலும் வெளிறிய நிறத்தில் இருக்கும். அவை சொட்டு சொட்டாகவும் இருக்கலாம். குறிப்பாக இரவு நேரத்தில் 4 முதல் 10 முறை வரை சிறுநீர் கழித்தாலும் அபாயம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

நுரைத்து வரும் சிறுநீர்;

சமயங்களில் வேகமாக சிறுநீர் கழிக்கும் போது நுரைத்து பொங்குவது உண்டு ஆனால் எப்போதும் அதிக நுரை அல்லது குமிழியாக வெளியேறினால் அதிகளவு புரதம் வெளியேறுகிறது என்று அர்த்தம்.

அதே போன்று சிறுநீர் பழுப்பு, சிவப்பு ஊதா நிறத்திலும் சிறுநீர் வெளியேறக்கூடும். சிறுநீரகங்கள் செயலிழக்கும் போது இந்த நிறமாற்றமும் உண்டாக்கும்.

சிறுநீர் கழிக்காத உணர்வு;

சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரகப்பையில் இருக்கும் சிறுநீர் முழுமையாக வெளியேற வேண்டும். ஆனால் இந்த பாதிப்பு இருக்கும் போது சிறுநீரகத்தை கழித்தாலும் அவை முழுமையாக வெளியேறாமல் இருக்கும்.

சருமத்தில் அரிப்பு;

இயல்பாகவே சிறுநீரகமானது உடலில் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது. ஆனால் சிறுநீரகங்கள் செயலிழக்கும் போது இரத்தத்தில் அதிகப்படியான நச்சுகள் தேங்கிவிடுகிறது.

சோர்வு, பலவீனம், மயக்க உணர்வு;

உடலில் சிறுநீரகத்தின் பணி தொய்வடையும் போது ரத்தத்தில் நச்சு அதிகமாக இருக்கிறது. சிறுநீரகம் உடலில் வைட்டமின் டி சத்தை எரித்ரோபயோடினாக மாற்றுகிறது. இவை ரத்த சிவப்பு அணுக்களுக்கு உதவக்கூடியவை. இந்த உற்பத்தி குறையும் போது ரத்த சிவப்பணுக்கள் குறைந்து ஆக்ஜிஜன் பற்றாக்குறை உண்டாகிறது.

அதிக வெப்பநிலையிலும் குளிர் உணர்தல்;

இது பொதுவான அறிகுறி என்பதால் பெரும்பாலும் எல்லோரும் குளுமை உடலுக்கு இத்தகைய பிரச்சனை என்று நினைக்கிறார்கள். நாள்பட்ட சிறுநீரக பிரச்சனை இருக்கும் போது அனிமீயா என்னும் ரத்த சோகை உண்டாக அதிக வாய்ப்புண்டு.

வாய்துர்நாற்றம்;

உடலில் நச்சுக்களை வெளியேற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் குறை உண்டாகும் போது நச்சுகள் உடலில் தேங்கிவிடுகிறது. அப்போது உடலில் தங்கும் நச்சுக்கள் வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும். பெரும்பாலும் வாய் துர்நாற்றத்தை அருகில் இருப்பவர்கள் உணர்வார்கள்.

இந்த அறிகுறிகள் அதிகமாகும் போது மூச்சு விடுதலில் சிரமத்தை உணர்வீர்கள். ஏனெனில் உடலில் இருக்கும் கூடுதல் நீரானது நுரையீரலுக்கு சென்று மூச்சு சுவாசத்தை சிரமமாக்கும். உடலுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் உண்டாகும்.

எதுவாயினும் மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *