எங்களுக்கு தமிழ்நாடு வேண்டாம்.. தட்டித் தூக்கிய ஆந்திரா.. CM விஜய்க்கு பேரிடி.!

Advertisements

மேல ஆந்திரா கீழ கர்நாடகா என்று வடிவேலு சொல்வதுபோல நடுவுல தமிழன் மாட்டிகிட்டு முழிக்கிறான். தொட்டதும் துவண்டுபோனது. காரணம் . தென்னிந்திய தொழில்துறையில் இதுவரை இல்லாத வகையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கவுள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களான வந்தாரை வாழ வைக்கும் சென்னை மற்றும், பருத்திகளின் நகரம் என்றழைக்கப்படும் கோவையில், ஆந்திரப் பிரதேச அரசு நேரடியாக தொழில் முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் முதலீட்டாளர் சந்திப்பு கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

ஜவுளி, உற்பத்தி மற்றும் வாகன உற்பத்தி ஆகிய முக்கிய துறைகளில் இயங்கி வரும் தமிழ்நாடு நிறுவனங்களைக் குறிவைத்து  நம் கண்ணைக் குத்துவதற்கு ஆந்திரா அதிரடி அடி எடுத்து வைக்கிறது.பாரம்பரியமாக இரு மாநிலங்களும் ஒன்றோடொன்று நேரடி தொழில் போட்டியில் ஈடுபடாமல், தனித்தனியாகவே முதலீடுகளை ஈர்த்து வந்தன.

ஆனால், இப்போது ஆந்திராவின் இந்த நேரடி முயற்சி, இரு மாநிலங்களுக்கும் இடையிலான தொழில் போட்டியை சூடுபிடிக்கும் அளவுக்கு அடுத்தக் கட்டத்திற்க  தூக்கிவிட்டியிருக்கிறது.ஆந்திரப் பிரதேச அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான ஆந்திரப் பிரதேச பொருளாதார வளர்ச்சி வாரியம், செவ்வாய்க்கிழமை சென்னையில் தனது முதல் ரோட்ஷோவை நடத்துகிறது.

அதனைத் தொடர்ந்து, மறுநாள் கோவையில் மற்றொரு பிரம்மாண்ட முதலீட்டாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.தமிழ்நாட்டில் இயங்கி வரும் முன்னணி தொழில் நிறுவனங்களை நேரடியாகச் சந்தித்து, ஆந்திராவில் முதலீடு செய்வதால் கிடைக்கும் சலுகைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆந்திர அதிகாரிகள் இல்லாததையும், பொல்லாதையும் எடுத்துரைத்து அவர்களை கவர திட்டமிட்டிருக்கிறார்கள்.

இதுவரை தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான கைய்ட்னஸ் ஆந்திராவில் இதுபோன்ற எந்தவொரு முதலீட்டாளர் சந்திப்பையும் நடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் மொத்த ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியில் சுமார் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள தமிழ்நாட்டின் ஜவுளித் தலைநகரும், தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்றழைக்கப்டும் கோவையை, ஆந்திர அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

சமீபத்தில்தான் ஆந்திர மாநில அமைச்சரவை ஒரு புதிய ஜவுளிக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது. இக்கொள்கை அமலுக்கு வந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே, கோவையில் உள்ள ஜவுளி நிறுவனங்களுக்கு ஆந்திராவில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்படுவது குறிப்பிடத்தக்க உத்தியாகப் பார்க்கப்படுவது மட்டுமல்லாமல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திர அரசு காட்டுத் தீயைப்போல தீவிர வேகம் காட்டி வருகிறது. முடங்கிக் கிடந்த EDB அமைப்பிற்குப் புதிய உயிர் கொடுக்கப்பட்டு, அது மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் கைய்ட்னஸ் அமைப்பில் பணியாற்றிய திறமையான அதிகாரிகளை ஆந்திராவின் EDB அமைப்பு தன் பக்கம் இழுக்கத் தொடங்கியுள்ளது. கெய்ட்னஸ் அமைப்பிலிருந்து இதுவரை சுமார் 7 உயர் அதிகாரிகள் ராஜினாமா செய்துவிட்டு, ஆந்திராவின் EDB அளித்த வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் விரைவில் ஆந்திர அரசில் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு வரவிருந்த சில முக்கிய திட்டங்கள் ஆந்திராவிற்கு தாரை வார்க்கப்பட்டியிருக்கிறது. காரணம் தமிழக முதல்வர் என்கிறார்கள்  பலர்.. குறிப்பாக தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல காலணி தயாரிப்பு நிறுவனமான ஹவாசுங், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ₹1,720 கோடி மதிப்பில் அமைக்கவிருந்த திட்டத்தை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தொகுதியான குப்பத்திற்கு மாற்றியது.

1901-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகின் பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனமான ராயல் என்பீல்டு, முதன்முறையாகத் தமிழ்நாட்டிற்கு வெளியே காலடி எடுத்து வைக்கிறது. ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள சத்தியவேடு பகுதியில் தனது புதிய உற்பத்தி ஆலையை அமைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தென்னிந்தியாவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது. இருப்பினும், ஆந்திர அரசின் இந்த நேரடி நடவடிக்கை மற்றும் அதிகாரிகளைத் தன் பக்கம் இழுக்கும் உத்தி, தமிழ்நாட்டின் தொழில் துறைக்கு ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது.

இரு மாநிலங்களும் தங்களது தொழில் கொள்கைகளை வலுப்படுத்தி வரும் நிலையில், வரவிருக்கும் நாட்களில் தென்னிந்தியாவில் தொழில் முதலீடுகளைக் கைப்பற்றுவதில் போட்டி இன்னும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *