Pongal Festival 2024: நாளை முதல் சிறப்புப் பேருந்துகள்!

Advertisements

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் நாளை முதல் 4,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கபடுகிறது.

சென்னை: தமிழ்நாட்டில் நாளை (ஜன.12) முதல் ஜனவரி 14ம் தேதிவரை பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாள் வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 14-ம் தேதிவரை 3 நாட்களுக்குச் சென்னை மற்றும் பிற ஊர்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் செல்லக் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம் உள்ளிட்ட 6 இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர திருச்சி, தஞ்சாவூர், கரூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொங்கல் விடுமுறைக்குப் பின் 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 4,706 சிறப்புப் பேருந்துகளும், பிற இடங்களிலிருந்து 8,478 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. சிறப்புப் பேருந்துகள்குறித்து அறியவும், புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *