MK Stalin:டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர்!

Advertisements

சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கும், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்கக் கோரியும் பிரதமரை நேரில் சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டிருந்தார்.

அதன்படி வருகிற 27-ந் தேதி (நாளை) காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளது.

இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டார். அங்குத் தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அவர் நாளைக் காலை 11 மணிக்குப் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

அப்போது, தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்துகிறார். விரிவான கோரிக்கை மனுவையும் அளிக்க உள்ளார்.

பிரதமரைச் சந்தித்து முடித்ததும் நாளை மாலையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *