
தமிழ் சினிமாவின் நகைச்சுவை சக்கரவர்த்தியான கவுண்டமணியின் மனைவி சாந்தி. இவர் உடல்நலக் குறைவால் சென்னையில் மே 5ம் தேதி காலமானார். குடும்ப வாழ்க்கை தனி, சினிமா வாழ்க்கை தனி என்று வாழ்ந்து வருபவர் கவுண்டமணி. அவரது மனைவி மற்றும் குழந்தைகளை தனது நெருங்கிய உறவினர்களின் வீட்டு விசேஷங்கள் தவிர வேறு எந்த இடத்திற்கும் அழைத்து சென்றதில்லை.
இவரின் பட பூஜைகளுக்கு கூட, சிங்கிள் மேன் ஆர்மியாகத்தான் வந்திருக்கிறார். கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த சாந்தி, மே 5ம் தேதி காலை காலமானார். கவுண்டணி மனைவியின் இழப்பினால் மனம் கலங்கிப் போயிருக்கிறார். கணவன் – மனைவி அந்நியோன்யம்னா அப்படி ஒரு அந்நியோன்யமாக இருவரும் இருப்பார்கள். ஒருவரை ஒருவர் ரொம்பவே பாசமாக பார்த்துப்பாங்க.
இவர்களது திருமணம் காதல் திருமணம். சினிமாவின் ஆரம்பகாலங்களிலேயே இவர்களது திருமணம் நடந்தது. கல்யாணத்திற்கு பின்னால் ஏற்றம் வரும் என்பார்கள். அந்த வார்த்தை கவுண்டமணி விஷயத்தில் உண்மையானது.மனைவி வந்த நேரம் நல்ல நேரம் அவருக்கு. சினிமா ஒலகில் திருப்புமுனையாக அமைந்துது. ஆகையால் மனைவி மீது ரொம்பவே தனி பிரியம் வைத்திருந்தார். வீட்டிற்கு வந்தாலே சாந்தி சாந்தி. என கூப்பிட்டபடி இருப்பார்.
வீட்டு நிர்வாகம், குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியது எல்லாமே சாந்திதான். கவுண்டமணி பேமென்ட் வாங்கினால் அப்படியே மனைவியிடம் கொடுத்துவிட்டுவார். அவர் வீட்டை விட்டு வெளியே கிளம்புகையில் மனைவியிடம் செலவுக்கு பணம் வாங்கிக் கொள்வதை சென்டிமென்ட் ஆக வைத்திருப்பார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் பெரிய பொண்ணு செல்வி, ரெண்டாவது மகள் ஸ்மிதா. மகள்களும் அம்மா மீது அதிக பாசம் வைத்திருந்தார்கள்.
சாந்தி சில காலமாகவே உடல் நலமில்லாமல் இருந்தார். இவரது மறைவு கவுண்டமணிக்கு பெரிய இழப்புதான்.உண்மையில் கவுண்டமணி பல நடிக்கைகளின் வாழ்க்கை சீரழித்தவர். இதையெல்லாம் அரிதும் சாந்தி கவுண்டமணியிடம் இதை பற்றி எதுவும் கேட்பதில்லை. இதனால் இவர்களின் வாழ்க்கை பிரச்னையின்றி சென்றது. இதை கேட்டிருந்தால் எல்லா நடிகர் போல் கவுண்டமணியும் மனைவி சாந்தியை விவகாரத்து செய்திருப்பார் என சொல்கிறார்கள். ஆக மொத்ததில் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருலுன் என்று சாந்தி வாழ்ந்திருக்கிறார்..
