
முதல்வர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன்கிபாத்) நிகழ்ச்சியின் மூலம் நாட்டின் மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகின்றார். இன்றைய 119-வது நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உரையாற்றினார்.
அவர் கூறியதாவது, “உத்தரகாண்டில் நடைபெற்ற தேசிய விளையாட்டில் 11,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் சிறப்பாகப் பங்கேற்றனர். உத்தரகாண்ட் தற்போது நாட்டின் வலுவான விளையாட்டு மையமாக மாறி வருகிறது.
விளையாட்டின் சக்தி தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் முழு மாநிலங்களை மாற்றும் திறனைக் கொண்டது. இது எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கிறது. போட்டியில் பங்கேற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
விண்வெளி துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. இஸ்ரோ தனது 100-வது ராக்கெட்டை விண்ணில் அனுப்பியுள்ளது.
பெண்களின் சக்தி நமது நாட்டை வலுப்படுத்துகிறது. தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களை ஊக்குவிக்கும் நோக்கில், எனது சமூக வலைதள கணக்குகள் ஒருநாள் பெண்களுக்கு ஒப்படைக்கப்படும். மகளிர் தினத்தன்று, மோடியின் சமூக வலைதள பக்கங்களில் பெண்கள் தங்களின் பதிவுகளைப் பகிரலாம்.
மாணவர்கள் எந்தவித மன அழுத்தத்திற்கும் ஆளாகாமல் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். உடல் பருமன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்படுவது ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. சமையல் எண்ணைக் குறைப்பது போன்ற முறைகள்மூலம் உடல் பருமனை தவிர்க்கலாம். உடல் பருமனை குறைத்து ஆரோக்கியமாக வாழ்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், என்று அவர் கூறினார்.
