
நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருமுறை காணாமல் போனதாகத் தெரிவித்துள்ளார்.
துபாய்க்குச் செல்வதற்காகச் சென்னை விமான நிலையத்துக்கு வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விருது பெறுவதற்காகத் துபாய்க்குச் செல்வதாக அவர் தெரிவித்தார்.
பீகாரில் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்துப் பேசிய அவர், தனது பெயரும் ஒருமுறை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறினார்.


