
லக்னோவில் நடைபெற்ற 68 ஆவது ஐ.பி.எல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் 68 ஆவது ஐ.பி.எல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் விளையாடிய லக்னோ அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக ஜோஷ் இங்லிஸ் 72 ரன்களும், ஆயுஷ் பதானி 43 ரன்களும் சேர்த்தனர்.
பந்து வீச்சு தரப்பில் பஞ்சாப் அணியின் மார்கோ ஜான்சன், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். இதன் பின்னர், களமிறங்கிய பஞ்சாப் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது.
இதில், அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 101 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 69 ரன்களையும் குவித்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வழிவகைச் செய்தனர். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 7 வெற்றிகளைப் பதிவுச் செய்துள்ளது.


