
கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த கார்த்தி, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சிறையில் இருந்த கார்த்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்குத் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்த கொடூரக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பது குறித்து காவல்துறையினர் உரிய பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்..




