இந்தியாவின் வான் தாக்குதலில் ஈடுபட்ட போர் விமானங்கள் உடைந்து சிதறல்..!

Advertisements

இந்தியாவின் வான் தாக்குதலில், போர் விமானங்களின் உடைந்த பாகங்கள் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய இராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக பல்வேறு காணொலிகள் இணைத்தில் வைரலானது. இதில் காஷ்மீரில் உள்ள பாம்போர் (Pampore) பகுதியிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு காணொளியில், போர் விமானம் ஒன்றின் எரிபொருள் நிரப்பப்படும் டேங்கின் உடைந்த பாகம் காட்டப்பட்டது.

இது இந்திய விமான படையில் உள்ள டசால்ட் மிராஜ் 2000 விமானத்தினுடைய உடைந்த டேங்க் பகுதியாக இருக்கும் என்று ஜேன்ஸ் டிஃபென்ஸ் எனப்படும் பாதுகாப்பு தொடர்பான இதழின் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதேபோல், மற்றொரு காணொளியில், பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டாவில் உள்ள அக்லியன் காலன் கிராமத்தில் அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றின் உடைந்த பாகங்கள் காட்டப்பட்டது.

இது இந்திய விமானப் படையில் இயக்கப்படும் மைரேஜ் 2000 மற்றும் ரஃபேல் போர் விமானங்களில் பயன்படுத்தப்படும், ஏவுகணையாக இருக்கும் என்று பிரிட்டிஷ் ராணுவ முன்னாள் அதிகாரி ஜஸ்டின் க்ரம்ப் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *