Y. S. Sharmila: இந்த தேர்தலில் போட்டியில்லை!

Advertisements

இந்த தேர்தலில் ஒய்.எஸ்.சர்மிளா  போட்டியிடப்போவதில்லை!

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு முழு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளதாக ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார்.Y. S. Sharmila

ஐதராபாத்: தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 30-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.சர்மிளா, தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

வாக்குகள் பிரிவதை தவிர்ப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர், சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு முழு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *