
உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவில் ஒருவர் குடிபோதையில் ரெயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திறந்திருந்த பீம்பூர் ரயில்வே கேட்டைக் கடந்து கார் ரெயில் தண்டவாளத்திற்குள் நுழைந்தது.
ஓட்டுநர் குடிபோதையில் காரைச் சாலையில் கொண்டு செல்வதற்கு பதிலாக ரெயில் தண்டவாளத்தில் வேகமாகச் செலுத்தினார்.
அதிவேகமாகச் சென்றதால், தண்டவாளத்தில் சுமார் 50 மீட்டர் தூரம் நகர்ந்து, பின்னர் கற்களில் தடுக்கி கார் நின்றது.
ரெயில் தண்டவாளத்தில் கார் ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டு ரெயில்வே அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகக் காரை நோக்கி விரைந்து சென்றனர்.
காரில் ஒரு தம்பதியும், மற்றும் சிலரும் இருந்தனர். திருமண நிகழ்ச்சிக்குச் சென்று அவர்கள் திரும்பி வந்துகொண்டிருந்ததாகத் தெரிகிறது.
என்ன நடந்தது என்று ஓட்டுநருக்குத் தெரியவில்லை. அவர் தனது காரை ரெயில் தண்டவாளத்தில் கொண்டு சென்றதாக ஊழியர்கள் தெரிவித்தனர். அவர் உடனடியாகக் காரிலிருந்து இறங்கி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
கேட் கீப்பர், கட்டுப்பாட்டு அறைக்குச் செய்தியை அனுப்பினார், அதன் பிறகு அதே ரெயில் பாதையை நெருங்கி டெல்லியிலிருந்து வந்துகொண்டிருந்த சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது.
ரெயில் சுமார் 35 நிமிடங்கள் ரயில் தண்டவாளத்திலேயே நின்றிருந்தது. தண்டவாளத்தில் கார் சிக்கியிருப்பது குறித்து நிலைய கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் மீட்புப் பணியை மேற்கொண்டு, நகராட்சி ஹைட்ரான்ட்டின் உதவியுடன் காரைத் தண்டவாளத்திலிருந்து அகற்றினார்.
சுமார் 35 நிமிடங்கள் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில், தண்டவாளத்திலிருந்து நகர்த்தப்பட்ட பின்னரே செல்ல முடிந்தது. தப்பி ஓடிய கார் ஓட்டுநர்மீது வழக்குப் பதவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
