
சென்னை:
ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் தனியாகப் பயணம் செய்த கர்ப்பிணி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் பின்னணியில், தமிழகம் முழுவதும் ரெயில்வே மற்றும் ஆர்.பி.எப். போலீசார் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது, ரெயிலில் பெண்கள் பெட்டி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 899 பேருக்குத் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே போலீசின் சூப்பிரண்டு ஈஸ்வரன் தெரிவித்தார்.
