
ரோம்:
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சியின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் பிரார்த்தனை கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார். மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டு, அங்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் போப் பிரான்சிஸ் நலம்பெற வேண்டிப் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மருத்துவமனை நிர்வாகம், போப் பிரான்சிஸ் மருத்துவ நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாடிகன் செய்தி தொடர்பாளர் மத்தேயு புரூனி கூறியுள்ளார்.
