
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மளிகைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் மளிகைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. த
கவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து, கோயம்பேடு காவல்துறையினர் தீ விபத்திற்க்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..



