“கட்சி தொடங்கிய உடன் ஆட்சிக்கு வரப்போவதாக பேசுபவர்களுக்கு” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Advertisements

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சி தொடங்கிய உடன் ஆட்சிக்கு வரப்போவதாக கூறுபவர்களுக்கு மக்கள் எதிர்வினை தெரிவிப்பார்கள் என விமர்சித்துள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி முதலமைச்சரின் முன்னிலையில் நடைபெற்றது. இதில், பாஜக மாவட்ட மூத்த தலைவர் தயா சங்கர், மாவட்ட பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம் மற்றும் பாஜக, அதிமுகவை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

அப்போது, அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக எப்போதும் மக்கள் சேவையை முன்னிலைப்படுத்தும் இயக்கமாக இருப்பதாக கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *