TASMAC Employees Union: டாஸ்மார்க் கடைகள் மூடல்!

Advertisements

சேலம் முதுநிலை டாஸ்மார்க் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக டாஸ்மார்க் பணியாளர்கள்  கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைபோராட்டம் நடத்தினர்.

சேலம்: தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்திப் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாகச் சேலம்பேர்லேன்ஸ் பகுதியில் உள்ளசேலம் முதுநிலை டாஸ்மார்க் மண்டல மேலாளர் அலுவலகம் முன்புநீண்ட காலமாகத் தற்காலிக பணி நீக்கம் கிடங்குப் பணி மாவட்ட பணியிட மாறுதல் பெற்ற பணியாளர்களுக்கு உடனடியாகக் கலந்தாய்வு மூலம் பணி வழங்கிட வேண்டும்,

பணி நிறைவளில் உள்ள குறைபாடுகளைக் கலைந்திட வேண்டும், ஏபிசி சுழற்சி முறை பணியிட மாற்றம் கொள்கையை அமல்படுத்திட வேண்டும், தமிழகத்தில் சில பிரச்சனைகள் தொடர்பாகப் பத்துக்கும் மேற்பட்ட சில்லறை மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது.

அங்குப்பணியாற்றியபணியாளர்களுக்குக் கலந்தாய்வு மூலம் மாற்றுப் பணி வழங்கிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தித் தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் பணியாளர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் மாநில துணைத்தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *