
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் நாளை கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.



