
விஜய் கட்சி தொடங்கியது அவரது அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல ஒரு பாதையை அவர் வகுத்துத் தந்தால் அவருடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் எம்.பி. ரவீந்திரநாத் என்று கூறினார்.
ரவீந்திரநாத் எம்.பி. ரவீந்திரநாத் செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னீர் செல்வம் வெற்றி பெறுவார் என்றும், தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்றும் கூறினார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பற்றிக் கேள்விக்குப் பதிலளித்த ரவீந்திரநாத் ஜனநாயக நாட்டியில் அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். அன்பு சகோதர் விஜய் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்குச் செய்து கொண்டிருக்கிறார். யார் நலத்திட்டங்களை மக்களுக்குச் செய்தாலும் நல்ல விஷயம்தான் என்று கூறினார். விஜய் கட்சி தொடங்கியது அவரது அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல ஒரு பாதையை அவர் வகுத்துத் தந்தால் அவருடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.
போடி தொகுதி இடைத்தேர்தல் வந்தால் நிற்க வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக நிற்பேன் என்று உறுதி கூறினார்.



