Sundaresapuram Temple: 200க்கும் அதிகமான மகான்கள் ஒரே இடத்தில் சமாதியான சிவாலயம்!

Advertisements

சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இடத்தில் மன்னனால் 200க்கும் மேற்பட்ட மகான்களைச் சமாதி செய்துவைக்கப்பட்ட பிரசித்தமான சிவாலயம், திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் உள்ள சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் சூரியன் மறைந்துவிட்ட போதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம். இன்று பராமரிப்பின்றி தனிநபர் ஒருவரின் அர்ப்பணிப்பால் புதுப்பிக்கபட்டு இருக்கிறது.

ஒரு சாதாரண சிவபக்தன் தான் குடியிருந்தவீட்டை விற்று கிடைத்தபணத்தில் ஆலய புணரமைப்பு பணிகளைச் செய்து வருகிறார்.இவ்வாலயத்தின் சிறப்பை வார்த்தையால் சொல்ல இயலவில்லை.ஆலயத்தில் எங்கு நின்றாலும் Cosmic Vibration நம்மை ஆட்கொள்கிறது.நமது வாழ்வியல் முறைகளை அங்குள்ள சிற்பங்கள் பறைசாற்றுகின்றன.


அதில் ஒருசிற்பம், தாயின் வயிற்றிலிருந்து குழந்தை பிறப்பை காட்டுகிறது, அப்புறம் குழந்தை நிலை தடுமாறியிருக்கும்போது (இன்று Breach என்று சிசேரியன் செய்வார்கள்) மருத்துவம் பார்க்கும் டெக்னிக்கூட தத்ரூபமாகத் தூணில் சிற்பமாகக் காட்டபட்டுள்ளது. அதனைத் தொடும்போது நமது மூச்சுநிலை பிராணாயாமத்தை உணரலாம். ஒரு தூணில் பிராணயாம பயிற்சியை  விளக்கும் அரிய சிற்பம் உள்ளது.

ஒரு சிறப்பு என்னவென்றால் அந்தச் சிற்பத்தின்மீது கை வைத்தாலே நமக்கு மூச்சு மேலும் கீழும் இயங்கத்தொடங்கி பிராணயாமம் இயல்பாகவே நடக்கிறது. இது சத்தியமான உண்மை.

இன்னும் பலசிறப்புகள் கொண்டுள்ள சிவாலயம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும். இப்பவும் பௌர்ணமி யாகபூஜை சிறப்பாகச் செய்யபடுகிறது. யாக ஜோதியில் பல்வேறு இறை ரூபங்கள் காட்சிகளாகக் கிடைத்துள்ளது. பாக்கியமுள்ளவர்கள் பௌர்ணமி ஹோமத்தில் பங்கெடுக்கலாம் முடிந்தால் காணிக்கை செலுத்தலாம், கட்டாயமில்லை.

ஆலய அமைவிடம்:- தென்காசி To மதுரை மார்க்கத்தில் கடையநல்லூருக்கு அடுத்த 4Km தூரத்தில் சுந்தரேஸ்வரபுரம் என்ற ஊரில் ஊருக்கு வெளியே அமைதியான தோப்புகளின் நடுவே அமைந்துள்ளது. கடையநல்லூரிலிருந்து Auto வசதியுள்ளது. சிவனருள் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள் தரிசிக்கலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *