
சென்னை நந்தம்பாக்கத்தில் கிரெடாய் ஃபேர்ப்ரோ 2025 என்ற வீடு விற்பனை கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், வீடுகள் விற்பனை கண்காட்சியைத் தொடங்கிய முதலமைச்சர், சூப்பர் சென்னை முன்னெடுப்பை அறிமுகம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் கட்டிடங்கள் ஆகும்.
* மக்கள் தொகை அதிகமாக உள்ள இடங்களில் அனைத்து தேவைகளையும் அரசு ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியாது.
* ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ததற்காக முதலமைச்சர் பாராட்டினார்கள்.
* தமிழகம் மிகவும் நகர்மயமாக்கப்பட்ட மாநிலமாக இருக்கிறது.
* வீடுகளின் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும்.
* தமிழ்நாடு முழுவதும் நகரம் மற்றும் கிராமங்களை மேம்படுத்த 10 மண்டல திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
