உலகை வென்றவரை செதுக்கிய சிற்பி!

Advertisements

கூடலூர்:

சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையை சேர்ந்த குகேஷ் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பட்டம் வென்றார். இதன் மூலம் இளம்வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

அவருக்குப் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர், விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவரது சாதனையைக் கவுரவிக்கும் வகையில் தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த சிற்பி இளஞ்செழியன் என்பவர் தர்ப்பூசணியில் குகேஷின் உருவத்தை வரைந்துள்ளார். இந்தியாவின் இளம் வயது செஸ் சாம்பியனுக்கு வாழ்த்துக்கள் என்று அதில் பதிவிட்டுள்ளார்.

இதனைப் பார்வையிட்ட அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இளஞ்செழியனுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

இவர் ஏற்கனவே அப்துல்கலாம், இஸ்ரோ தலைவர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களைத் தர்ப்பூசணியில் செதுக்கி பாராட்டுப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *