சாம்பியன்ஸ் டிராபிக்கு ரெடியான ரச்சின் ரவீந்திரா!

Advertisements

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்பாடு செய்த 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தானில் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணிக்கான ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறும்.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் இரண்டு பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, தற்போதைய சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் உள்ளன, ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில், இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்குக் கராச்சியில் தொடக்க ஆட்டம் நடைபெறும், இதில் பாகிஸ்தான் அணியும் விளையாடும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *