சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளிய 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி..!

Advertisements

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்  அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூரியகுமார் யாதவிற்கான ஓய்வுக்குப் பிறகு, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு தேர்வு அரங்கேறியுள்ளது. அதுதான் 15 வயதே ஆன இடதுகை தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியின் வருகை!

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ், 16 இன்னிங்ஸ்களில் 776 ரன்கள் குவித்து ‘ஆரஞ்சு தொப்பியை’ (Orange Cap) வென்றார். அதுமட்டுமின்றி, கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்து ஒரே சீசனில் 72 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, தொடரின் ‘மிக மதிப்புமிக்க வீரர்’ (MVP) விருதையும் தட்டிச் சென்றார். முன்னதாக, அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றி பெறச் செய்திருந்தார்.

“வைபவ்வின் அசுரத்தனமான ஆட்டத்தை எங்களால் புறக்கணிக்க முடியவில்லை, அவராகவே தனது திறமையால் இந்திய அணியின் கதவை உடைத்து உள்ளே வந்துள்ளார்” எனத் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் பாராட்டியுள்ளார். ஜூன் 26-ல் அயர்லாந்தில் தொடங்கும் டி20 போட்டியில் வைபவ் களம் இறங்கினால், சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதிக்கும் மிக இள வயது இந்திய வீரர் என்ற அரிய சாதனையை அதிகாரப்பூர்வமாகப் படைப்பார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *