
நைட் பார்ட்டியில் சன் டிவி சீரியலில் நடித்துப் பிரபலமான நடிகை ப்ரீத்தி ஷர்மா, நைட் பார்ட்டியில் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மாடல் அழகியான ப்ரீத்தி ஷர்மா, டிக் டாக்கில் வீடியோக்கள் வெளியிட்டு அதன் மூலம் பிரபலமானார். இதையடுத்து அவருக்குச் சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இந்தி மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்த ப்ரீத்தி ஷர்மா, பின்னர் திருமணம் சீரியல் மூலம் தமிழுக்கு வந்தார்.
பின்னர் சன் டிவிக்கு தாவிய அவர், ராதிகா தயாரித்த சித்தி 2 சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தச் சீரியல் வேற வெலவில் ஹிட் ஆனதால் ப்ரீத்தி ஷர்மாவுக்கு அடுத்தடுத்து சீரியல் வாய்ப்புகள் வரத் தொடங்கின. பின்னர் ஜீத்தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளின் தொடர்களிலும் நடித்தார் ப்ரீத்தி.
இதையடுத்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் என்கிற நெடுந்தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ப்ரீத்தி ஷர்மா. அந்தச் சீரியல் வெற்றிநடைபோட்டு வருகிறது. இவர் நடிப்பது மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் செம்ம ஆக்டிவாக இருக்கிறார். இதனால் ப்ரீத்திக்கு 9 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர்.
ரசிகர்களைக் கவரும்விதமாகப் புகைப்படங்களையும் அதில் அடிக்கடி பதிவிட்டு லைக்குகளையும் அள்ளி வருகிறார் ப்ரீத்தி ஷர்மா. அந்த வகையில் தற்போது பார்ட்டிக்கு கவர்ச்சியாக உடையணிந்து சென்று அவர் எடுத்த புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகின்றனர்.
நடிகை ப்ரீத்தி ஷர்மா, மலர் சீரியல் குழுவினருடன் பர்த்டே பார்ட்டிக்கு சென்றிருக்கிறார். அப்போது டைட் உடையில் செக்ஸி லேடியாக அவர் வந்திருந்ததை பார்த்த நெட்டிசன்கள், அழகில் சினிமா ஹீரோயின்களையே மிஞ்சிவிட்டதாகக் கமெண்ட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

