P. K. Sekar Babu: பாஜக டெபாசிட் கூடப் பெற முடியாது!

Advertisements

திமுகவை பார்த்தும்தான் அவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. எத்தனை முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தாலும் பாஜக டெபாசிட் கூடப் பெற முடியாது என்று அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி சென்னை புயல், மழை வெள்ளத்தில் மக்கள் அவதிப்பட்டதாகக் குற்றம்சாட்டியிருந்த நிலையில் அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள தங்கசாலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது வராத பிரதமர் தன்னுடைய அரசியல் சுயலாபத்திற்கு தமிழ்நாடு வருகிறார். பிரதமர் மோடி தண்ணீரில் வடை சுடுகிறார்.

பிரதமர் மோடியின் தமிழக வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பாஜகவை தமிழகத்தில் தக்க வைத்துக்கொள்ளவும் திமுகவை பார்த்தும்தான் அவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. எத்தனை முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தாலும் பாஜக டெபாசிட் கூடப் பெற முடியாது.

நிவாரண நிதியாகத் தற்போது வரை சல்லி காசு கூடத் தராமல் வஞ்சிக்கும் பிரதமரைத் தமிழக மக்கள் வஞ்சிக்கத் தயாராகிவிட்டனர். உறவுக்குக் கைகொடுப்போம் உரிமைக்குத் தோல் கொடுப்போம் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும் என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *