
நியூசிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல ஆபாசப் பட நடிகை ஒருவர் அளித்த நேர்காணலில் பல கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார். எப்போதிலிருந்து நீங்கள் இந்த மாதிரி படங்களில் நடிக்க ஆரம்பித்தீர்கள் என்று கேட்டபோது அதற்கு அந்த பெண்மணி மகப்பேறு விடுமுறையில் இருந்தபோது தான் ஆபாசப் படங்களில் நடிக்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார், அதற்கு ஓரு காரணத்தையும் கூறி இருக்கிறார். அந்த காரணம் தான் ரொம்பவே வினோதமானது.
வெளிநாடுகளில் நடிக்கக்கூடிய நடிகைகள் தரும் நேர்காணல்கள் எப்போதுமே கொஞ்சம் வேறுபட்டு தான் இருக்கும். இதற்கு அவர்கள் சொல்லக்கூடிய கருத்துக்களும் கொஞ்சம் விநோதமாகத்தான் இருக்கும் . அப்படி தான் இப்போது நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஆபாசப் பட அழகி “லைலா கெல்லி” அளித்த பேட்டி இப்போது ட்ரெண்டாகி வலம் வர ஆரம்பித்திருக்கிறது. அதில் அவர் ஆபாச படங்களில் நடிப்பதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர் வங்கியில் வேலை செய்து வந்தாராம். அதன் பின்னரே வங்கி வேலையை விட்டு விட்டு ஆபாசப் படங்களில் நடிக்கத் தொடங்கியதாக அவர் குறிப்பிடுகிறார். வங்கி வேலையை விட்டு நின்ற போது தனது சம்பளம் வெறும் $65,000 ஆக மட்டுமே இருந்தாகவும் ஒரு பைசா கூட சேமிக்க முடியாமல் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுளேன் என்றும் மேலும், வேலை- குடும்ப சமநிலைக்காகவே ஆபாசப் படங்களில் நடிக்கத் தொடங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “என்னால் வங்கி வேலையைப் பார்க்கவே முடியவில்லை.. ஒரு கட்டத்திற்கு மேல் கார்ப்பரேட்டில் வேலையில் தொடர முடியவில்லை.. எப்போதும் ஒரே வேலை செய்ய எனக்கு விருப்பமில்லை..இதில் எனக்கு முழுவதும் ஒத்து போகவில்லை. மேலும், எனக்கு ஒர்க் லைஃப் பேலன்ஸ் முக்கியம்.. எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க விரும்பினேன்..நான் வங்கி வேலையில் இருத்திருந்தால் என்னால் என் குடும்பத்தை சமாளிக்க முடிந்திருக்க முடியாது. இதன் காரணமாகவே ஆபாசப் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். இது எனது வருமானத்தை அதிகரித்து, நிதி சுதந்திரத்தையும் வழங்கியது” என்கிறார்.
சில காலத்திற்கு முன்பு அவருக்குக் குழந்தை ஒன்று பிறந்தது . அப்போது அவர் வங்கியில் வேலை பார்த்துகொண்டிருப்பதனால் அவருக்கு வங்கியில் இருந்து மகப்பேறு விடுப்பு வழங்கியுள்ளனர். ஆதலால் அவர் விடுப்பில் இருந்தாராம். மகப்பேறு விடுப்பு முடிந்ததும் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கும்..அப்போது குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாதே என நினைத்து வேதனைப்பட்டுள்ளார். அப்போது என்ன செய்யலாம் என்று யோசித்தாராம். அப்போதுதான் அவர் ஆபாசப் படத் தளம் ஒன்றில் கணக்கைத் தொடங்கி, அதில் வீடியோக்களை அப்லோட் செய்யத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் அவருக்கு $250,000க்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது. இதுவே அவரது வாழ்க்கையை மொத்தமாக மாற்றியதாக அவர் குறிப்பிடுகிறார். வங்கியில் வேலை செய்த போது இந்த தொகையை எல்லாம் தான் நினைத்துக் கூட பார்த்தது இல்லை என்றும் கொஞ்சக் காலத்திலேயே லட்சக் கணக்கில் சேமிக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். அவர் மேலும் கூறுகையில், “வங்கியில் வேலை செய்த போது என்னால் சொந்தமாக ஒரு வீட்டை வாங்க முடியும் என நான் யோசித்துக் கூட பார்த்தது இல்லை.
நியூசிலாந்தில் வீடுகளின் விலையும் சரி வாழ்க்கை செலவும் சரி அதிகரித்துவிட்டது. சம்பளம் வரும்போது அது ஒரு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். சேமிக்க எல்லாம் முடியாது. இதனால் வீடு வாங்குவது குறித்து நான் யோசித்தது கூட இல்லை. ஆனால், இப்போது அப்படி இல்லை நிலைமை மொத்தமாக மாறிவிட்டது” என்கிறார். அதேநேரம் வீடு வாங்கப் போகும்போது சில வங்கிகள் தனது லோனை பிராசஸ் கூட செய்யவில்லையாம். ஆபாசப் படங்களில் நடிப்பதால் லோன் விண்ணப்பத்தையே நிராகரித்துவிட்டதாம்.
அவர் மேலும் கூறுகையில், “நான் முதலில் ஹோம் லோன் கோரி ஒரு வங்கியில் விண்ணப்பித்தேன். நான் ஆபாசப் படங்களில் நடிக்கிறேன் என்பதை விண்ணப்பத்திலும் போட்டிருந்தேன். இதனால் அவர்கள் லோன் தர தயாராக இல்லை.லோன் பெற அனைத்து தகுதிகளும் இருந்தும் வேலை காரணமாக எனது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர். கடைசியில் ஒரு வங்கி எனக்கு ஹோம் லோன் தந்துவிட்டது என்ற போதிலும் அதற்கு முன்பு எனக்கு நல்ல அனுபவம் அமையவில்லை” என்று கூறியுள்ளார்.



