புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை..! மேலிடத்தில் ரகசிய மூவ்..!

Advertisements
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாள் ஜூன் 4 ஆம் தேதி வர இருக்கிறது. இந்த செய்தி இதுவரை சாதாரணமாக இருந்தாலும் இந்த வருடம் நிட்சயமாக பலத்த எதிர்பார்ப்புடன் தான் அமையப்போகிறது. அண்ணாமலை புதிய கட்சி ஒன்றை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி ஏற்கனவே சூடாக இருக்கும் தமிழக அரசியல் களம் இன்னும் சூடு பிடித்திருக்கிறது.

புதிய கட்சியை தொடங்குவதற்காக,தற்போது உள்ள பாஜக விலுருந்து அவர் வெளியேற இருக்கிறார் என்றும்,அதை தடுப்பதற்கு பாஜக மேலிடம் முக்கிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.பாஜகவினுடைய மாநில தலைவராக அண்ணாமலை இருக்கும்போது தன்னுடைய அதிரடியான பேச்சாலும், துடிப்பான செயல்பட்டாலும் இளைஞர் பட்டாளத்தையே கவர்ந்தவர்.

பொதுவாகவே இவரது பேட்டிகளும், அரசியல் விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் நல்ல கவனத்தை பெறும். அதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், “அண்ணா தமிழ்நாட்டுல ஒரு இளிச்சவாயன் இருக்குறான் ணா அவன் பெயர் அண்ணாமலை..என்று செய்தியாளர்களிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவர்.

முன்னாள் துணை முதல்வர் ஆக இருந்த உதயநிதி பற்றிய செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு ” அண்ணா அவரை UPSC எக்ஸாம் எழுதி பாஸ் மார்க் வாங்க சொல்லுங்கண்ணா… நான் அரசியல் ல விட்டே போய்டுறேன்” போன்ற அண்ணாமலையின் பதில்கள் சமூக வலைத்தளங்கள்ல வைரல் ஆகி மிகப்பெரும் Troll களுக்கும் உள்ளானது. பெரும்பாலும் தமிழகத்துல இவருடைய ஆதரவாளர்கள் இளைனர்களாகவே இருக்கிறார்கள்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே அண்ணாமலை காவல் அதிகாரியாக பணியாற்றியவர். இந்த காரணம்தா இவரை அரசியலுக்கு வந்த பின்பும் இன்னும் துடிப்புடன் செயல்படவும் வைத்தது. 2024 மக்களவை தேர்தல்ல தமிழ்நாட்டில் பாஜக விற்காக ஒரு தனி அணியை அமைத்து அன்றய தேர்தல்ல  11 % வாக்குகளை பெற்றது பாஜக.

ஆனால் இவர் அந்த பொறுப்பிலிருந்து மாற்றப்பட்ட பிறகு அதிமுகவுடன் ஒரு பலமான கூட்டணியை அமைத்தும் கூட பாஜக வெறும்
3 % வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.. இந்த நிலையிலதா ஜூன் முதல் வாரத்தில் அண்ணாமலை தேசிய தலைமையைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார் என்றும், அண்ணாமலை நற்பணி மன்ற நிர்வாகிகளை தீவிரமாக மக்கள்பணி செய்யுங்கள் என உத்தரவு பறந்துள்ளதாக தகவல்கள் சொல்கின்றன.
மேலும் அவர் புதிய கட்சி தொடங்க போகிறாரா? இல்லை பாஜகவிலேயே தொடர்ந்து பணிசெய்ய போகிறாரா என்று அரசியல் வியூகங்களும் ரெக்கை கட்டி வருகிறது. மக்களவை தேர்தலில் அண்ணாமலை பணியாற்றிய  நேரத்தில் 11 % வாக்குகள் பாஜகவிற்கு வந்தன. அவரை மாற்றிய பின்பு  3 % தான் கிடைத்தன.  வியூகங்கள் படி பார்க்கும்போது தற்போது அண்ணாமலை புதிய கட்சியை துவங்கினார் என்றால், தமிழகத்தில் பாஜக வினுடைய வாக்காளர்கள் அனைவரும் அண்ணாமலையின் பக்கம் திரும்பி விடுவார்கள் என்ற கணக்கும் போடலாம்.

பாஜகவின் உள்ளே பல உள்கட்சி பூசல்கள் இருப்பதனால் அண்ணாமலை அதிருப்தியில் இருக்கிறார் என்றும், பாஜகவின் சில முக்கிய நிர்வாகிகளுடன் அண்ணாமலைக்கு மோதல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையிலதா அண்மையில கோவையில்  நடைபெற்ற மாநில மையக்குழு கூட்டத்துல அண்ணாமலையின்  ஆதரவாளர்கள் சிலர் அமைப்பு செயலாளர் PL சந்தோஷ் அவர்களிடம் , பாஜகவில் நிறைய இளைஞர்களை அண்ணாமலை,சேர்த்திருக்குறார், அவருக்கு உரிய பொறுப்பு வழங்க வேண்டும் என்று கேக்கப்பட்டதாகவும், அதற்கு PL சந்தோஷ் யாருக்கு எப்போ பொறுப்பு வழங்க வேண்டும் என்று  எங்களுக்கு தெரியும்.

அவர் விரும்பும் நேரத்தில் அவருக்கு பொறுப்பு வழங்க முடியாது நாங்கள் விரும்பும் நேரத்தில் அவருக்கு பொறுப்பை கொடுப்போம் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. முன்னதாகவே  செய்தியாளர் ஒருவர் நீங்கள் தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ளீர்களா என்ற கேள்விக்கு  அதற்கு நொடியும் யோசிக்காமல், “தனிக்கட்சி ஆரம்பிக்கும்போது சொல்கிறேன்”என்று அண்ணாமலை கூறிவிட்டுச் சென்றார்.
தனிக்கட்சி தொடர்பான கருத்துகளை அவர் மறுக்கவில்லை என்பதால் அண்ணாமலையின் இந்தப் பதில் அரசியல் அரங்கில் கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.. கட்சி ஆரம்பித்து 2  வருடங்களில் முதல் தேர்தலில் ஒரு மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது தவெக. தற்போது அண்ணாமலை ஒரு கட்சியை தொடங்கினால் அது எப்படி சுயரூபம் எடுக்கும் என்பது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை பொறுத்துதான் இருக்கிறது.

அண்ணாமலை புதியக்கட்சியை தொடங்குவாரா?இல்லை பாஜகவை வலுப்படுத்தும் கோரிக்கைகளோடு பாஜக மேலிடத்தை சந்திப்பாரா? அரசியல் களம் அண்ணாமலையை வரவேற்குமா? அல்லது எதிர்க்குமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *