
வாரணாசியில் பிரதமர் மோடி, மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் உடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்டிற்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார். வாரணாசியில் பிரதமர் மோடி மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலமை சந்தித்தார். இதில், தலைவர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்தினர். பின்னர், உத்தரகண்டின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி வான்வழியாக ஆய்வு செய்ய உள்ளார். மோடியும் ராம்கூலமும் இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக வளர்ச்சி கூட்டாண்மை மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துபடும் எனக் கூறப்படுகிறது.


