
மேற்கு வங்காளத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது.வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது.
கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்டம் தொடங்கி, ஜூன் 1-ம் தேதியுடன் நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது.
தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜல்பைகுரி பகுதியில் அமைந்துள்ள டீக்கடைக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று சென்றார். அங்கு டீ தயாரித்துக் கொடுத்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
மக்கள் நலத்திட்டங்கள் மூலம் கிராமப்புற தேர்தல்களில் கட்சி தனது கவனத்தை புதுப்பித்துள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளில் ஊழலை அகற்ற கட்சி பாடுபடும் என்று பானர்ஜி உறுதியளித்தார். வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது மக்களின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதுதொடர்பான புகைப்படங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

