
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 27 ஆவது போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
இலங்கை தலைநகரமான கொழும்பூவில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 27 ஆவது போட்டி நடைபெறுகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான வீரர்களும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா தலைமையிலான வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், போட்டியைக் காண வரும் ரசிகளுக்குத் தீவிர பரிசோதனை செய்தப் பின்னரே மைதானத்தில் அனுப்படும் என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. எனவே, இன்றையப் போட்டியில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புள்ளது.




