அமெரிக்காவில் இந்திய மாணவிக்கு கோர மரணம்..கேலியாக சிரித்த கொடூர போலீஸ்!

Advertisements

வாஷிங்டன்:

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவியைக் காரை ஏற்றிக் கொலை செய்ததாகக் காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அதிவேகமாகக் கார் மோதியதில் 100 அடி தூரத்திற்கும் மேல் மாணவி தூக்கி வீசப்பட்ட நிலையில் அந்தப் போலீஸ் அதிகாரி கேலியாகச் சிரித்ததாகப் பகீர் புகார் எழுந்துள்ளது.

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கல்லூரி படிப்பை முடித்த இளம் பெண்ணான ஜான்வி கண்டுலா உயர் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு வாஷிங்டன் அருகே சியாட்டில் தங்கி பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சியாட்டில் சாலையைக் கடக்க முயன்றபோது விபத்தில் ஜான்வி உயிரிழந்தார். இந்த நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை வாகனம் மோதி ஜான்வி உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.

சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேகமாக அந்தக் கார் ஜான்வி மீது மோதியதாகவும் அதில் 100 அடி உயரத்திற்கு அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில் தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்தியதில் காரை ஓட்டியது கெவின்டே என்ற காவல் அதிகாரி என்பதும் அவருடன் டானியல் என்ற காவல் அதிகாரி பயணித்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில் டேனியல் தனது உயர் அதிகாரியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்தப் பெண்ணை நான் இடித்து விட்டேன் பல மீட்டர் தூரம் பறந்து சென்று அவர் விழுந்து விட்டாரெனச் சிரித்தபடியே தகவல் அளித்துள்ளார்.

இந்த நிலையில் அவரது யூனிஃபார்மில் பொருத்தப்பட்டிருந்த கேமரா இந்தக் காட்சிகளைப் படம் பிடித்த நிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *