
இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சமாக 70 ஆயிரத்து 941 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது.
இந்தியாவில் அந்நியச் செலாவணியும், தங்கமும் போதிய அளவில் கையிருப்பு உள்ளது. இதனால் கடந்த வாரத்தில் மட்டும் அந்நியச் செலாவணி 805 கோடி டாலர்கள் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 70 ஆயிரத்து 941 கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது.
நாட்டில் 12 ஆயிரத்து 308 கோடி டாலர் மதிப்புக்குத் தங்கம் இருப்பில் உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.



