Advertisements

இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் செனட்டர் பென்னி வாங்கை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.
பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் விநியோகச் சங்கிலி மீள்திறனை உறுதி செய்தல் போன்ற துறைகளில், இந்தியா – ஆஸ்திரேலியா இடையே வளர்ந்து வரும் விரிவான மூலோபாயக் கூட்டாண்மை குறித்து தாங்கள் விவாதித்ததாகக் கூறினார்.
சுதந்திரமான, திறந்த, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று தெரிவித்தார்.
Advertisements


