
இங்கிலாந்து அணியுடனான ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் ஆறு விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து கிரிக்கெட் டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஐந்தாவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்றுத் தொடங்கியது. இதில் இந்திய அணி முதலில் விளையாடியது.
முதல் நாள் ஆட்டநேர இறுதியில் ஆறு விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்திருந்தது. கருண் நாயர் 52 ரன்களுடனும், வாசிங்டன் சுந்தர்
9 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.



