
புதுடெல்லி:
மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நேற்று போபாலிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். அந்த விமானத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட 8 சி இருக்கை சேதமடைந்த நிலையில் இருந்தது.
இதுகுறித்து, சிவராஜ் சிங் சவுகான் தனது எக்ஸ் வலைதளத்தில், போபால்-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் சேதமடைந்த இருக்கை வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, “நான் போபாலிலிருந்து டெல்லிக்கு பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தேன். ஏர் இந்தியா விமானத்தில் எனக்கு டிக்கெட் பதிவு செய்யப்பட்டது. எனக்கு ஒதுக்கப்பட்ட 8 சி இருக்கை சேதமடைந்தது. மற்ற பயணிகள் எனக்கு இருக்கையை மாற்றுமாறு கூறினார்கள், ஆனால் மற்றவர்களுக்குத் தொந்தரவு செய்யக் கூடாது என்பதால், சேதமடைந்த இருக்கையிலேயே பயணம் செய்தேன்.”
டாடா நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு, ஏர் இந்தியாவின் சேவையில் மேம்பாடு ஏற்பட்டிருக்கும் என எதிர்பார்த்தேன்.
