மத்திய மந்திரியிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா!

Advertisements

புதுடெல்லி:

மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நேற்று போபாலிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். அந்த விமானத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட 8 சி இருக்கை சேதமடைந்த நிலையில் இருந்தது.

இதுகுறித்து, சிவராஜ் சிங் சவுகான் தனது எக்ஸ் வலைதளத்தில், போபால்-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் சேதமடைந்த இருக்கை வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, “நான் போபாலிலிருந்து டெல்லிக்கு பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தேன். ஏர் இந்தியா விமானத்தில் எனக்கு டிக்கெட் பதிவு செய்யப்பட்டது. எனக்கு ஒதுக்கப்பட்ட 8 சி இருக்கை சேதமடைந்தது. மற்ற பயணிகள் எனக்கு இருக்கையை மாற்றுமாறு கூறினார்கள், ஆனால் மற்றவர்களுக்குத் தொந்தரவு செய்யக் கூடாது என்பதால், சேதமடைந்த இருக்கையிலேயே பயணம் செய்தேன்.”

டாடா நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு, ஏர் இந்தியாவின் சேவையில் மேம்பாடு ஏற்பட்டிருக்கும் என எதிர்பார்த்தேன்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *