Advertisements

நாட்டின் எண்பதாவது விடுதலை நாளையொட்டிக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தில்லியில் உள்ள தேசியப் போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
நாடு விடுதலையடைந்து 79 ஆண்டு நிறைவடைந்துள்ளது. இன்று எண்பதாம் ஆண்டு விடுதலை நாள் நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டித் தில்லியில் உள்ள தேசியப் போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
Advertisements


