டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட சிறுமி சுட்டுக்கொலை!

Advertisements

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானை சேர்ந்தவர் அன்வரூல் ஹக். இவருக்குத் திருமணமாகி ஹீரா (வயது 15) என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேறி குடியுரிமை பெற்று 28 ஆண்டுகளாக வசித்து வருகிறார். சிறுமி ஹீரா அமெரிக்காவில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்துள்ளார்.

ஹீரா தனது செல்போனில் பிரபல சமூக வலைத்தள செயலியான டிக்டாக்கை பதிவிறக்கம் செய்து அதில் வீடியோ வெளியிட்டு நேரம் செலவிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். நவநாகரிக உடைகள் அணிந்து டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமாக இருந்துள்ளார்.

ஹீராவின் இந்த நடவடிக்கையை அன்வரூல் ஹக் கண்டித்து வந்துள்ளார். இருப்பினும் ஹீரா டிக்டாக் பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. சில நாட்களுக்கு முன்பு அன்வரூல் ஹக் தனது மகள் ஹீராவுடன் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு வந்திருந்தார்.

பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் உள்ள பூர்வீக வீட்டில் ஹீராவுடன் அன்வரூல் ஹக் தங்கி இருந்தார்.

சம்பவத்தன்று அன்வரூல் ஹக் வீட்டினுள் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாகப் பக்கத்து வீட்டினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அங்கே வீட்டு முற்றத்தில் ஹீரா உடலில் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்துள்ளார். சிறுமியைப் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஹீரா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்தான விசாரணையில் அன்வரூல் ஹக் முன்னுக்கு பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் தனது மகளைத் துப்பாக்கியால் சுட்டு கொன்றதை ஒத்து கொண்டுள்ளார். சிறுமி ஹீரா தொடர்ந்து டிக்டாக் பயன்படுத்தி வந்ததால் அவரைத் திட்டமிட்டு கொலை செய்வதற்காகவே அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்கு கூட்டி வரப்பட்டது தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து அன்வரூல் ஹக் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *