
Gaza Residents: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 7-வது நாளாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. காஸாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், அந்நகரை விமானம்மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஐநா பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ், “காசா முழுமையும் முற்றுகை, எப்படி மக்களை இடம் மாற்றுவது? காசாவில் பாதுகாப்பு வழித்தடங்களை அமைக்க வேண்டும். மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தக் கூடாது. அனைத்து பணயக் கைதிகளையும் உடனே விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.


