
ஓரணியில் தமிழகம்’ என்ற புதிய உறுப்பினர் சேர்ப்பு திட்டத்தை, கட்சியினருக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார்.
தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டங்களை முதலமைச்சர் மு.கஸ்டாலின் நடத்த இருப்பதாக, அறிவித்துள்ளார். அதன்படி ஓரணியில் தமிழகம்’ என்ற புதிய உறுப்பினர் சேர்ப்பு திட்டத்தை தொடங்கியுள்ளார். அதன்மூலம் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று, திமுக ஆட்சியின் பயன்களை கேட்டறிந்து, அதில் விருப்பம் உள்ளவர்களை உறுப்பனர்களாக சேர்க்கபடி கட்சியினருக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் குறைந்தபட்சம், 30 சதவீதம் பேராவது கட்சி உறுப்பினர்கள், என்ற இலக்குடன், உறுப்பினர் சேர்ப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும், ட்டசபை தொகுதிவாரியாக கட்சி நிர்வாகிகள் சந்திப்பை துவங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.




