
சென்னை, பெரம்பூர் தொகுதி வியாசர்பாடி சர்மா நகர் 1-வது தெருவில், புதிதாகக் கட்டப்பட்ட முதலமைச்சர் விஜய்யின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெறுகிறது. இதனை, முதலமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்குத் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து, அவர் அருகில் உள்ள நியாவிலைக் கடைக்குச் சென்று ஆய்வு செய்து, புதிய நியாவிலை கார்டுகள், பட்டாக்கள் உள்ளிட்ட சான்றிதழ்களைப் பொதுமக்களுக்கு வழங்குகிறார்.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இன்று முதல் முறையாக அவர் தனது தொகுதிக்குச் செல்வதால், தவெக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.




