அண்ணா பல்கலை விவகாரத்தில் உண்மை வெளிவர சி.பி.ஐ. விசாரணை தேவை – தம்பிதுரை!

Advertisements

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஜனவரி) 31-ந் தேதி தொடங்கியது. பாராளுமன்றத்தின் இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

இதையடுத்து கடந்த 1-ந் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து இரு சபைகளிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்மீதான விவாதங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்துப் பேசினார்.

இந்நிலையில் மாநிலங்களவை அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை பேசுகையில்,

அண்ணா பல்கலை. வளாகப் பாலியல் வழக்கில் சிக்கியது தி.மு.க. நபர் என்பதால் மாநில தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரியது போல், உண்மையை வெளிக்கொணரச் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *