Chandira Priyanga: எம்.எல்.ஏ.வாக செயல்பட தடை இல்லை!

Advertisements

Chandira Priyanga: எம்.எல்.ஏ.வாகச் சந்திர பிரியங்கா செயல்பட எந்தத் தடையும் இல்லையெனச் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி: சபாநாயகரிடம் அரசு விழாவில் சந்திர பிரியங்கா பங்கேற்றது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குச் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பதில் அளித்துக் கூறியதாவது:-

அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சந்திர பிரியங்கா இனி எம்.எல்.ஏ.வாக மட்டுமே செயல்படுவார். எம்.எல்.ஏ. என்ற முறையிலேயே அரசு விழாவில் பங்கேற்றார். எம்.எல்.ஏ.வாகச் சந்திர பிரியங்கா செயல்பட எந்தத் தடையும் இல்லை.

பதவி நீக்கக் கோப்பு உள்துறை ஒப்புதல் பெற்று ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் ஒப்புதல் கிடைக்கும். தொடர்ந்து அரசாணை வெளியாகும். மத்திய அரசு இதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை. சந்திர பிரியங்கா வகித்த துறைகளை முதலமைச்சர் கூடுதலாகக் கவனித்து வருகிறார்.
இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *