
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பனையூரில் உள்ள அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்.சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள பாமக புதிய அலுவலகத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள், ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்று வருகிறது.
மேலும் வருகின்ற ஜுலை 20ஆம் தேதி அன்று விழுப்புரத்தில் 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குமாறு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற உள்ளது. இதைத்தொடர்ந்து 108 மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்று வருகிறது.




