20 நிமிடங்கள் மட்டுமே பேச்சுவார்த்தை..முக்கிய பங்கு வகித்த ஓபிஎஸ் மகன்?

Advertisements

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணம், தமிழக அரசியல் களத்தில் மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின் பின்னணியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஓபிஎஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தையும், மூத்த அரசியல் விமர்சகர் குருமூர்த்தி சமரச முயற்சியும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓபிஎஸ் , அமித்ஷா சந்தித்ததாகக் கூறப்படும் நிலையில்,இந்த பேச்சுவார்த்தை சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு குறுகிய நேரத்தில் ஒரு சந்திப்பு முடிவடைவது, கூட்டணி தொடர்பாக சில முக்கிய முடிவுகள் ஏற்கெனவே பின்னணியில் எடுக்கப்பட்டுவிட்டதை குறிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த கூட்டணியை அமைப்பதில் குருமூர்த்தி அவர்கள் முக்கிய பங்கு வகித்ததாகவும், இவரே இரு தரப்புக்கும் இடையேயான ‘டீல்’-ஐ இறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.

வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்த பாஜக தலைமை விரும்புகிறது. இதில், அதிமுக கூட்டணியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்ஸை மீண்டும் கூட்டணியில் இணைக்க வேண்டும் என்பதில் பாஜக முனைப்புடன் உள்ளது.தென் மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் ஓபிஎஸ், என்டிஏ-வில் இணைவது கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்று பாஜக கருதுகிறது.

ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி , ஓபிஎஸ்-ஸை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கோ அல்லது என்டிஏ கூட்டணியில் சேர்ப்பதற்கோ கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த கூட்டணியின் ஒரு அங்கமாக ஓபிஎஸ் இருந்தால், தாம் கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என்ற நிலைப்பாட்டில் ஈபிஎஸ் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பாஜக தலைமை, ஓபிஎஸ்-ஐ அதிமுக-வுக்குள் சேர்க்காமல், அவருக்கு ஒரு தனி அமைப்பாகவோ அல்லது குழுவாகவோ என்டிஏ-வில் இடமளிக்க மாற்று வழிகளை கையாள முயற்சிப்பதாக தெரிகிறது.

தனிமரமாக நிற்கும் ஓபிஎஸ், இனி அதிமுக-வில் சேர வாய்ப்பில்லை என்ற நிலை உறுதியாகிவிட்ட நிலையில், பாஜக-வின் ஆதரவுடன் என்டிஏ-வில் ஒரு இடத்தை உறுதிசெய்யும் முயற்சியில்தான் டெல்லி சென்றுள்ளார். இந்த சந்திப்புகளுக்கு பிறகு, அவர் ஒரு தனி கட்சி அல்லது அமைப்பை அறிவித்து, அதன் மூலம் என்டிஏ-வில் சில இடங்களை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இதுகுறித்து விரைவில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *