அஜித் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி..!

Advertisements

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை (மே 30, 2026) அதிகாலை காலமானார். துபாயில் இருந்த நடிகர் அஜித், இந்தச் செய்தி கேட்டு உடனடியாக சென்னை திரும்பினார்.

சென்னையின் ஈஞ்சம்பாக்கம் (Injambakkam) பகுதியில் உள்ள அஜித்தின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது தாயாரின் உடலுக்கு, தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், தனது நீண்ட கால நண்பரான அஜித்குமாருக்கு நேரில் ஆறுதல் கூறி, அவரது கைகளைப் பிடித்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

முன்னதாக எக்ஸ் (X) தளத்தில் முதல்வர் விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தியில்: “அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *