அசாமில் 10 மாத குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று!

Advertisements

சீனாவிலிருந்து குழந்தைகளைத் தாக்கக்கூடிய மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிப்பு 13 ஆக உயர்ந்தது.

Advertisements

இந்த நிலையில் அசாமில் 10 மாதக் குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அசாம் மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியது,

எச்எம்பிவி பாதிக்கப்பட்ட குழந்தை திப்ருகாரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருக்கிறது.

அசாமில் பதிவான முதல் எச்எம்பிவி தொற்று இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் இது கண்டறியப்படுகிறது, புதிதாக எதுவும் இல்லை. இந்த வைரஸ் தொற்று பெரும்பாலும் 4 முதல் 5 நாள்களுக்குள் குணமாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *