
தஞ்சை அருகே தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளை மூட வலியுறுத்தி வணிகர்கள் முழுமையாக கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்
தஞ்சை மாவட்டம் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளை மூட வலியுறுத்தி வணிகர்கள் முழுமையாக கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த கடையில் மது அருந்தி விட்டு மதுபிரியர்களின் அட்டகாசத்தால் பெண் பயணிகள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் குடியிருப்புவாசிகள் வணிகர்கள் பெரிய அவதிக்குள்ளாகி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழக அரசு இந்த கடையை அகற்றாவிட்டால் சாலை மறியல் மற்றும் பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக வணிகர்கள் எச்சரித்துள்ளனர்.



