Advertisements

புதுச்சேரி தனியார் பள்ளி மாணவர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில், மாணவ, மாணவிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 424 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் இந்த பள்ளியில் பயின்ற காயத்திரி என்ற மாணவி 594 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். தீபிகா 593 மதிப்பெண்கள் பெற்று 2 வது இடத்திலும், லோக ரஞ்சன் மற்றும் ஜோஸ்லின் ஆகிய இருவரும் 592 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தை பெற்றுள்ளனர். மேலும் 40 மாணவர்கள் 550 மதிப்பெண்கள் மேல் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், முதலிடம் பெற்ற மாணவி காயத்ரிக்கு 50 சதவிகித கல்வி கட்டணம் இலவசம் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
Advertisements
