West Bengal:துர்கா பூஜை… கைதிகளுக்கு மட்டன் பிரியாணி வழங்க முடிவு!

Advertisements

மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய பண்டிகையான துர்கா பூஜா கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், துர்கா பூஜையை முன்னிட்டு அம்மாநில கைதிகளுக்குச் சிறையில் மட்டன் பிரியாணியும் பசந்தி புலாவும் உணவாக வழங்கப்படும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவராத்திரியின் 9 நாட்களுக்கும் கைதிகளுக்கு இந்தப் புதிய உணவு வகைகள் வழங்கப்படவுள்ளது. துர்கா பூஜை விழாவின்போது சமையற்காரர்களாகப் பணிபுரியும் கைதிகளே இந்த உணவு வகைகளைச் சமைக்கவுள்ளார்கள்.

கைதிகளின் மத உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், விருப்பப்படும் கைதிகளுக்கு மட்டும் தான் அசைவ உணவு வழங்கப்படும் என்றும் பண்டிகை உணர்வைக் கைதிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *